வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Geetha Priya
Last Modified: வியாழன், 31 ஜூலை 2014 (17:47 IST)

பேங்க் கொள்ளையில் சிபிஐ அதிகாரியாக விவேக் ஓபராய்

ஒரு காலத்தில் ஐஸ்வர்யா ராயின் காதலராக மிடுக்குடன் வலம்வந்த விவேக் ஓபராயை இப்போது கண்ணாடி வைத்துதான் தேட வேண்டியிருக்கிறது. இவருடன் அரை டஜன் நடிகர்கள் நடித்த கிரான்ட் மஸ்தி பிரமாதமான வெற்றியை சமீபத்தில் பெற்றது. அடல்ஸ் ஒன்லி கதை காட்சி வசனம் என்று படம் முழுக்க ஒரே அதிரடி.
கிரான்ட் மஸ்தியில் விவேக் ஓபராயுடன் நடித்த ரித்தேஷ் தேஸ்முக் மீண்டும் ஓபராயுடன் ஒன்றிணைகிறார். படம் பேங்க் சோர்.
 
ரித்தேஷ் தேஸ்முக்கின் தலைமையில் செயல்படும் ஒரு வங்கிக் கொள்ளை டீமை சிபிஐ அதிகாரியான ஓபராய் துரத்துவதுதான் படத்தின் கதை. எல்லோருக்கும் எனிமா தரும் கொள்ளைக் கூட்டத்துக்கு ஓபராய் எப்படி கடுக்காய் தருகிறார் என்பதை சுவாரஸியமாக சொல்லவிருக்கிறார்கள்.
இந்தப் படத்தை யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. 12 வருடங்களுக்கு முன் இவர்களின் தயாரிப்பில் சாத்தியா படத்தில் ஓபராய் நடித்தார். அதன் பிறகு இப்போதுதான் நடிக்கிறார்.
 
சாத்தியா மணிரத்னத்தின் அலைபாயுதே படத்தின் இந்தி ரீமேக்.