1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 2 பிப்ரவரி 2017 (17:16 IST)

அடிவாங்கிய பத்மாவதி படக்குழு ஜெய்ப்பூரை காலி செய்தது

இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி ஜெய்ப்பூரில் பத்மாவதி படத்தின் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்த போது கர்னி ராஜ்புட் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் படப்பிடிப்புதளத்தில் தாக்குதல் நடத்தி பொருட்களை அடித்து நொறுக்கியதுடன் பன்சாலியையும் கடுமையாக தாக்கினர். இந்தத் தாக்குதல் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் கடும் புயலை கிளப்பியது.


 
 
இந்நிலையில், ஜெய்ப்பூரில் இனி படப்பிடிப்பு நடத்துவதில்லை என்று மூட்டை முடிச்சுகளுடன் படக்குழு அங்கிருந்து கிளம்பியுள்ளது. வேறு இடத்தில் அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடத்த பன்சாலி திட்டமிட்டுள்ளார்.
 
பன்சாலியை தாக்கிய கர்னி ராஜ்புட் அமைப்பினர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது.