வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Modified: வியாழன், 15 நவம்பர் 2018 (11:24 IST)

மீடூ: புகார் மட்டும் தான் கூறுவோம்; ப்ரூஃப் கேட்க கூடாது - ராதிகா ஆப்தே பளீச்

மீடூவில் புகார் கூறும் நடிகைகளிடம் ஆதாரம் கேட்கக்கூடாது என நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.
 
பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே, தமிழில் தோனி, வெற்றிச்செல்வன், ஆல்இன்ஆல் அழகுராஜா, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மீடூவில் இவர் தான் சந்தித்த பாலியல் தொல்லைகள் பற்றி அவ்வப்போது தைரியமாக வெளியே கூறி வருகிறார்.
 
இந்நிலையில் மீடூ குறித்து பேசிய அவர் மீடூ இயக்கத்தை 100 சதவீதம் ஆதரிக்கிறேன். மீடூ புகார் கூறும் நடிகைகளிடம் ஆதாரம் கேட்பது தவறு. இந்த விஷயத்தில் ஆதாரத்தை வைத்துக் கொண்டு சுத்த முடியாது என ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.