வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Mahalakshmi
Last Modified: சனி, 29 நவம்பர் 2014 (12:13 IST)

ப்ரியங்கா சோப்ராவுக்கு சொந்தமான கட்டிடத்தில் விபச்சாரம்

மும்பை போலீசார் பியூட்டி சென்டர் ஒன்றில் நடத்திய சோதனையில் அங்கு விபச்சாரம் நடப்பது தெரிய வந்தது. உடனடியாக அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த இளம் பெண்களை கைது செய்து பெண்கள் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பினர். 
பியூட்டி பார்லரின் உரிமையாளர் விபச்சார வேட்டை குறித்து கேள்விப்பட்டதும் தலைமறைவாகிவிட்டார். போலீஸ் அவரை தேடி வருகின்றனர்.
 
இந்த விவகாரத்தில் அனைவரையும்விட கவலையில் இருப்பவர் ப்ரியங்கா சோப்ரா. போலீஸ் சோதனை நடத்திய பியூட்டி பார்லர் ப்ரியங்காவுக்கு சொந்தமான கட்டிடத்தில்தான் இயங்கி வந்தது. உரிமையாளர் என்றமுறையில் போலீசார் ப்ரியங்காவை தொந்தரவு செய்யப் போவதில்லை என்றாலும் விபச்சார வழக்கில் ப்ரியங்காவின் பெயரையும் இணைத்துப் பேசுவது அவருக்கு கடும் அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.