வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Veeramani
Last Updated : ஞாயிறு, 20 ஏப்ரல் 2014 (18:43 IST)

மீண்டும் நீரஜ் பாண்டே இயக்கத்தில் அக்ஷய் குமார்

ஸ்பெஷல் 26 படத்தைத் தொடர்ந்து மீண்டும் அக்ஷய் குமாரை இயக்குகிறார் நீரஜ் பாண்டே. படம் தொடங்குவதற்கு முன்பே சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Akshay Kumar - Special 26
நீரஜ் பாண்டேயின் முதல் படம் ஏ வெட்னெஸ்டே. இந்திப் படவுலகை நிமிர்ந்து பார்க்க வைத்த படங்களில் ஒன்று. அதன் பிறகு, அடிதடி காதல், காமெடி என்று பாலிவுட்டில் படம் காட்டி வந்த அக்ஷய் குமாரை வைத்து ஸ்பெஷல் 26 படத்தை இயக்கினார். அக்ஷயின் வழக்கமான ஆடல் பாடல் இல்லாத இந்தப் படமும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது.
 
இதையடுத்து மீண்டும் அக்ஷய் குமாரை வைத்து தனது மூன்றாவது படத்தை எடுக்கிறார் நீரஜ் பாண்டே.

படத்தின் பெயர், தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று எதுவும் இன்னும் முடிவாகவில்லை. அதற்குள் படம் 2015 ஜனவரி 23 வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இதே தேதியில்தான் அக்ஷய் குமாரின் கப்பார் படத்தை வெளியிட படத்தின் தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி முடிவு செய்துள்ளார். கப்பார் தமிழ் ரமணாவின் இந்தி ரீமேக். வானம் படத்தை இயக்கிய க்ஷ்தான் கப்பாரின் இயக்குனர்.
Akshay Kumar & Neeraj Panday
நாங்கள் மூன்று மாதத்துக்கு முன்பே 2015 ஜனவரி 23 படத்தை வெளியிடுவது என்று முடிவு செய்து அறிவித்தும் விட்டோம். அப்படியிருக்கையில் நீரஜ் பாண்டே எங்களை கேட்காமல் எப்படி அதே தேதியில் தனது படத்தை வெளியிடப் போவதாக கூறலாம் என கப்பார் தரப்பு கொந்தளிக்கிறது. இரண்டுமே அக்ஷய் படம் என்பதால்தான் இநத கோபம் பற்கடிப்பு எல்லாம்.
 
நீரஜ் பாண்டே இப்போதுதான் லொகேஷன் பார்க்கவே ஆரம்பித்திருக்கிறார் என்பது கூடுதல் செய்தி.