போஹா நகரத்தில், சிசிலியா கிமென்ஸின் முயற்சிகள், 2012-ல் இயேசுவின் ஓவியத்தை மிக மோசமாக சிதைத்துவிட்டது. இயேசுவை பார்ப்பதற்கு ஒரு குரங்கு போல அவர் மாற்றிவிட்டார் என்று பலர் புகார் கூறியுள்ளனர்.
85 வயதான சிசிலியா கிமென்ஸ் பேசுகையில், அவர் வரையும் போது ஒரு நம்பிக்கையால் வழிநடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். தற்போது அந்த வார்தைகள் இசை நாடகத்தில் இடம் பிடித்திருக்கிறது.
அவரின் முயற்சிகள் கடுமையான விமர்சனங்களை கொண்டுவந்த அதே நேரத்தில், போஹா நகரத்திற்கு ஒரு நல்ல வணிக வாய்ப்பையும் கொண்டுவந்துள்ளது. இந்த நகரத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு லட்சத்து 70 ஆயிரம் பயணிகளை ஈர்த்துள்ளது.