வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 26 மார்ச் 2015 (20:05 IST)

கன்னியாஸ்திரி பாலியல் வல்லுறவு சம்பவம் - இரண்டு பேர் கைது

மேற்கு வங்க மாநிலத்தில் கத்தோலிக்க மடமொன்றைச் சேர்ந்த பள்ளிக்கூடம் ஒன்று கொள்ளையடிக்கப்பட்டப்போது, அங்கிருந்த வயது முதிர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பேரை இந்திய காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.


 
இந்த மாதத்தின் முற்பகுதியில் நடந்த இந்த பாலியல் தாக்குதலினால் அந்த கன்னியாஸ்திரிக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட வேண்டியிருந்தது. எழுபது வயதைத் தாண்டியவர் அவர்.
 
முதல் சந்தேக நபர் மும்பையில் கைதுசெய்யப்பட்டு, பின்னர் கல்கத்தா நகரில், சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
 
நீதிமன்றத்திற்கு முன்பு ஆஜரான அந்த நபரை 14 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இரண்டாவது நபர் கல்கத்தாவிலேயே கைது செய்யப்பட்டார். இவர் அந்த தாக்குதலை நடத்திய நபர்களுக்கு அடைக்கலம் அளித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
 
இந்த சம்பவம் நாடளவில் பல ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியிருந்தது. சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தாமதிப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆத்திரம் வெளியிட்டுள்ளனர்.