வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 17 நவம்பர் 2015 (18:06 IST)

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பணியில் ராணுவம்

தமிழ் நாட்டின் வடமாவட்டங்களில் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவ இந்திய ராணுவமும் விமானப்படையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மீட்புப்பணிகளில் பல இடங்களில் படகுகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.


 
 
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்துவரும் மழையில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சுமார் 70 பேருக்கும் மேல் இறந்துள்ளனர்.  பல்லாயிரக்கணக்கானோர் தாழ்வான இடங்களிலிருந்து அப்புறப்பட்டுத்தப் பட்டுள்ளனர்.
 
ஆனால், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை ஆந்திராவை நோக்கி நகர்ந்துவிட்டதால் சென்னையில் மழை நின்றிருக்கிறது. இருந்தபோதும், நகரின் தாழ்வான பகுதிகள் இன்னும் நீரில் மூழ்கியுள்ளன.
 
பல பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ளவர்களை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன.