பின்னழகை எடுப்பாக்க முயன்று போலி டாக்டர்களால் பின்னாளில் பெண்கள் படும் பாடு
பின்னழகை எடுப்பாக்கிக்கொள்வதற்காக அறுவை சிகிச்சைகளை நாடும் பெண்களின் எண்ணிக்கை, அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது.
ஆனால் இப்படியான சிகிச்சைகளை முறையாகச் செய்வதற்கு பல்லாயிரம் டாலர்கள் செலவாகிறது.
இதன் காரணமாக மலிவு விலையில் இச்சிகிச்சைகளைச் செய்து தருகிறோம் எனக் கூறி மக்களை ஏமாற்றும் போலி மருத்துவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
மருந்து என்று சொல்லி, மரம் ஒட்டும் பசை, டயர் ஒட்டும் பசை போன்றவற்றை பெண்களின் புட்டங்களில் ஊசி மூலம் இவர்கள் செலுத்திவிடுகின்றனர்.