வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 18 நவம்பர் 2016 (20:46 IST)

தஞ்சை, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதிகளில் நாளை வாக்கு பதிவு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின் போது பணம் பட்டுவாடா மற்றும் வேட்பாளர் மரணம் ஆகிய காரணங்களால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி நாளை தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய சட்டசபை தொகுதிகளில் வாக்கு பதிவு நடைபெறவுள்ளது.


 

 
தமிழக சட்டமன்ற தேர்தலின் போது பணம் பட்டுவாடா காரணமாக தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. திருப்பரக்குன்றம் சட்டசபை தொகுதியில் வேட்பாளர் மரணம் காரணமாக அந்த தொகுதியிலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
 
இந்த மூன்று தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி நவம்பர் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
 
அதைத்தொடர்ந்து தமிழகத்தில் தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய சட்டசபை தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைப்பெறவுள்ளது.
 
இதற்காக அந்தந்த தொகுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.