வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By bala
Last Modified: திங்கள், 16 ஜனவரி 2017 (13:52 IST)

ஸ்டாலினுக்கு எஸ்; சசிகலாவுக்கு நோ - ரஜினியின் ரியாக்சன்

ரஜினியின் சமீபத்திய பேச்சு அரசியல் வட்டாரத்தில் அனைவருடைய கவனத்தையும் திருப்பியுள்ளது. குறிப்பாக அதிமுக வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

 

 

ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று ஒவ்வொரு வருடமும் அவரது பிறந்த நாளில் ரசிகர்கள் கோரிக்கை வைப்பது வழக்கம். அதற்கு ரஜினியின் ரியாக்சனோ ஒன்றும் இருக்காது. இது வழக்கமான ஒன்றுதான். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து சற்று கூடுதலாக கோரிக்கைகள் எழுந்தன. ஆனாலும் பதில் எதுவும் சொல்லாமல் இருந்த ரஜினி, துகளக் விழாவில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற துக்ளக்  ஆண்டு விழாவில் சோ ராமசாமி உருவப்படம் திறப்பு விழாவில் கலந்துகொண்ட ரஜினி பேசும்போது, தமிழக அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது என்று கூறினார். இவரது இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அதிமுக வட்டாரம் கூடுதல் கவலையில் உள்ளதாம். ஏற்கெனவே அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலாவுக்கு தமிழமெங்கும் எதிர்ப்புகள் அதிகரித்துவரும் நிலையில் ரஜினியின் இந்த பேச்சு அவர்களை கவலை அடைய செய்துள்ளது.

சமீபத்தில் திமுக செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலினுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த், அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.