வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 7 நவம்பர் 2017 (16:26 IST)

கட்சி ஆரம்பிக்க தொண்டர்களிடம் காசு கேட்ட ஒரே தலைவர் கமல் தான். ஜெயகுமார் கிண்டல்

தமிழக ஆட்சியாளர்களுக்கு திமுகவை விட தற்போது கமல்ஹாசனை பார்த்துதான் அதிக பயம் வருகிறது. திமுகவும் ஊழல் கட்சி என்றே மக்கள் மனதில் இருப்பதால் இரண்டு ஊழல் கட்சிகளில் எந்த ஊழல் கட்சி சிறந்தது என்பதையே இதுவரை மக்கள் தேர்வு செய்து வந்தனர்



 
 
ஆனால் முதல்முறையாக ஊழல் கறையே இல்லாமல் ஒரு தலைவராக கமல்ஹாசனை மக்கள் பார்க்கின்றனர். அதுவும் கட்சி ஆரம்பிக்க என்னிடம் காசு இல்லை, ஆனாலும் என் கட்சிக்கு தொண்டர்களாக இருக்கும் ரசிகர்கள் எனக்கு காசு கொடுப்பார்கள் என்று கூறினார். கமல்ஹாசனின் இந்த அணுகுமுறை மக்களை கவர்ந்துள்ளது
 
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய அமைச்சர் ஜெயகுமார், அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். கட்சியார் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். ஆனால் ஜனநாயகத்தில் மக்கள்தான் இறுதி எஜமானர்கள். அன்று எம்ஜிஆர், நேற்று ஜெயலலிதா, இன்று இரட்டை இலை ஆகியவற்றின் பக்கத்தில் மக்கள் உள்ளனர். உலகத்திலேயே கட்சி தொடங்க தொண்டர்களிடம் கேட்ட ஒரே நபர் கமல்தான். எனக்கு தெரிந்து இதுவரை யாரும் கட்சி தொடங்குவதற்கு தொண்டர்களிடம் பணம் கேட்டதில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கலாய்த்துள்ளர்.