வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 9 டிசம்பர் 2016 (12:23 IST)

ஜெ. இல்லை; போயஸ் கார்டனில் நடராஜன் : சுப்பிரமணிய சுவாமி டிவிட்

உடல் நலக்குறைபாடு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி இரவு மரணமடைந்தார்.


 

 
இதையடுத்து தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் உருவாகியுள்ளது.  அடுத்த தலைமை குறித்து அதிமுக வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல், அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை சசிகலா குடும்பத்தினர் ஆக்கிரமித்துக் கொண்டதாகவும் பேசப்படுகிறது.
 
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தனது விட்டர் பக்கத்தில் “ சசிகலாவின் கணவர் நடராஜன், போயஸ் கார்டன் உள்ளே வரக்கூடாது என்பதில் ஜெயலலிதா பிடிவாதமாக இருந்தார். ஆனால், அவர் தற்போது மரணம் அடைந்து விட்டதால், நடராஜன் போயாஸ் கார்டனில் இருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.


 

 
ஜெ. வாழ்ந்த வரை போயஸ் கார்டன் வீட்டிற்குள் அனுமதிக்கப்படாத நடராஜன், ஜெ. மறைந்த அடுத்த நாளே போயஸ் கார்டனுக்குள் நுழைந்து விட்டது குறிப்பிடத்தக்கது.