வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 23 ஏப்ரல் 2017 (10:10 IST)

தினகரனை 7 மணி நேரம் ரவுண்டு கட்டிய டெல்லி போலீஸ்!!

இரட்டை இல்லை சின்னம் தொடர்பாக லஞ்சப் புகாரில் டெல்லி குற்றப் பிரிவு போலீசாரிடம் டிடிவி தினகரன் ஆஜராகினார். 


 
 
அதிமுக கட்சியின் இரட்டை இல்லை சின்னத்தை பெற்று தர லஞ்சம் வாங்கியதாக தலைநகர் டெல்லியில் சுகேஷ் சந்திரா என்பவர் கைது செய்யப்பட்டார். 
 
அவரிடம் இருந்து ரூ.1.30 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், டிடிவி தினகரனிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக சுகேஷ் சந்திரா வாக்குமூலம் அளித்துள்ளார்.
 
டிடிவி தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேரில் ஆஜராக சம்மன் வழங்கினர். இதனால் டெல்லி சென்ற தினகரனிடம் சுமார் 7 மணிநேரம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
மேலும், இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தெரிகிறது.