வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 6 ஜனவரி 2017 (14:10 IST)

சசிகலாவிற்கு 63 சதவீத அதிமுகவினர் எதிர்ப்பு - சர்வே தரும் தகவல்

அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சசிகலாவின் தலைமைக்கு 63 சதவீத அதிமுக தொண்டர்கள் எதிப்பு தெரிவித்திருப்பது தெரியவந்துள்ளது.


 

 
ஜெ.வின் மறைவிற்கு பின் அவரது தோழி சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், அவரை முதல்வர் இருக்கையில் அமரவைக்க அதிமுக முக்கிய அமைச்சர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
 
அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் அவருக்கு ஆதரவாக நின்றாலும், கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் அவருக்கு கடும் எதிர்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பிரபல வார இதழ் நக்கீரன் அதிமுக தொண்டர்களிடம் சமீபத்தில் ஒரு சர்வே நடத்தியது. 
 
அதில் 63 சதவீத அதிமுக தொண்டர்கள் சசிகலா பொதுச்செயலாளர் ஆனதை எதிர்த்து கருத்து தெரிவித்தனர். 27 சதவீத பேர் மட்டுமே சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 10 சதவீத பேர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
 
ஜெயலலிதாவின் வெற்றிடத்தை சசிகலா நிரப்புவார், எதிர்கட்சிகளிடமிருந்து கட்சியை காப்பாற்றுவார், ஜெ.வின் நம்பிக்கைக்கு உரியவர் என சசிகலா ஆதரிப்பவர்கள் காரணங்கள் கூறியுள்ளனர். அதேபோல், ஜெ.வின் மரணத்திற்கு காரணமானவர் மற்றும் ஜெ.விற்கு அவர் இணையானவர் அல்ல என அவரை எதிர்ப்பவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
அதில்  ஜெ.வின் அண்ணன் மகள் அரசியலுக்கு வரவேண்டும் என சிலரும், ஓ.பன்னீர் செல்வமே முதல்வரக தொட வேண்டும் என சிலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.அதேபோல், சசிகலா தலைமையில் அதிமுக தேர்தலை சந்தித்தால், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க மாட்டோம் என 52 சதவீத அதிமுக தொண்டர்களும், வாக்களிப்போம் என 37 சதவித தொண்டர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
மக்கள் நலனுக்காக போராடும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சமீபத்தில் நடத்திய ஆன்லைன் சர்வேயில் சசிகலாவிற்கு எதிராக 97 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.